புடவையை மாற்ற முயற்சிக்கு ஆசிரியர்களுக்கு அரசாங்கம் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!

Date:

புடவை அல்லது ஒசரி அல்லாத வேறு  ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது பாடசாலைச் சூழல் என்பது மாணவர்களின் எதிர்காலத்தில் தொடர்புபட்டுள்ளது அதனால் ஆசிரியர்கள் புடவையிலோ அல்லது ஒசரி புடவையிலே பாடசலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்

மேலும் சட்ட விதிகளுக்கும் கலாசாரத்துக்கு ஏற்றவகையில் பாடசாலை காணப்பட வேண்டும், இதற்கு முரானான கருத்துக்களை வெளியிடும் அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படும் அங்கத்தவர்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு அரசாங்கம் ஒருபோது இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் உடையை மாற்றும் முயற்சி தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவும் கருத்து வெளியிட்டார்.

Popular

More like this
Related

AI பாதக விளைவுகளிலிருந்து கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பு தேவை: டெல்லியில் ஜனாதிபதி அநுர உரை

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு...

எப்ஸ்டீன் வழக்கு: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது.

பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று ...

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற முதல் தராவிஹ் தொழுகை.

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகக் கருதப்படும் பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமழான்...

சீன ரோபோவை இந்திய கண்டுபிடிப்பு எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய கல்கோடியாஸ் பல்கலைக்கழகம்..!

ஒரு பெரிய AI உச்சி மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ நாயை...