பெண் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய மூத்த காவல்துறை அதிகாரி மீது விசாரணை ஆரம்பம்!

Date:

பாணந்துறை தெற்கு பிரதான பொலிஸ் பரிசோதகரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டிசம்பர் 12, சனிக்கிழமையன்று, நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் போது, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பல பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து, தள்ளிய சம்பவத்தில் இருந்து, சிறப்பு விசாரணைக்கான கோரிக்கை எழுந்துள்ளது.

இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

ஒன்றுகூடுவதற்கும் கருத்து வெளியிடுவதற்குமான உரிமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் விதிகளுக்கு பொலிஸார் மதிப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...