பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Date:

இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனமான பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் புதிய முஸ்லிம் ஆண் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து தசாப்த காலமாக  கல்விப் பணியை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னணி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச்சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் 2022 டிசம்பர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட வளாகத்தில் நடைபெறும்.

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்

  • க.பொ.த (சா.த)பரீட்சையில் இஸ்லாம். கணிதம். தமிழ் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அவற்றில் மூன்று பாடங்களிலாவது திறமைச் சித்திகளைப்
  • (C)பெற்றிருத்தல் 2005.01.31ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்
  • தேக ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

1. நேர்முகப் பரீட்சை காலை 8.00மணிக்கு ஆரம்பமாகும்
2.எழுத்துப் பரீட்சை மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகும்
3.நேர்முகப் பரீட்சை இடம்பெறும் தினத்தில் விண்ணப்பப் படிவங்கள் வாயிற் காவல் பகுதியில் விநியோகிக்கப்படும்

மேலதிக விபரங்களுக்கு…

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...