மத்திய வங்கி ஆளுநர் தனது சம்பளம், சலுகைகள் பற்றி வெளிப்படையாகக் கூறினார்!

Date:

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) ஓய்வூதியத்துடன் 2.5 மில்லியன் ரூபா சம்பளம் பெறுவதாக கூறியதை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மறுத்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான் எந்த ஓய்வூதியத்தையும் பெறவில்லை. இதை பொறுப்புடன் சொல்கின்றேன். ஏதோ ஒரு வகையில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமது மத்திய வங்கிக்குச் சென்றேன். எல்லோருக்கும் கிடைக்கும் சம்பளத்தையே நானும் பெற்றிருக்கிறேன். ஆனால் எனக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என்றார்.

மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பெறும் சம்பளம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் தமக்கு 4 இலட்சம் ரூபா மாதாந்த சம்பளம் கிடைப்பதாகவும், அதற்கு முன்னர் தாம் பெற்ற ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வதாகவும்  ஆளுநர் என்ற வகையில், உத்தியோகபூர்வ கார் மற்றும் வசிப்பிடத்திற்கான உரிமை எனக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...