இணையவழி குற்றங்களை தடுக்கும் சர்வதேச ஒப்பம்: முதல் தெற்காசிய நாடாக கையெழுத்திட்ட இலங்கை!

Date:

புடாபெஸ்ட் சைபர் குற்ற சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நெறிமுறையில் கைச்சாத்திட்ட முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சைபர் கிரைம் எனப்படும் இணைய வழிக் குற்றம் தொடர்பான சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையான புடாபெஸ்ட் சமவாயம் உருவாக்கப்பட்டது.

இந்த நெறிமுறையில் இலங்கை, குரோஷியா, மோல்டோவா, ஸ்லோவேனியா, உக்ரைன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. இதன் மூலம், 30 நாடுகள் தற்போது இந்த நெறிமுறையில் கையெழுத்திட்டுள்ளன.

சேவை வழங்குநர்கள் மற்றும் பதிவாளர்களுடன் நேரடி ஒத்துழைப்பு, பயனர் தகவல் மற்றும் பரிமாற்ற தரவுகளை பெறுவதற்கான பயனுள்ள வழிமுறைகள், அவசரநிலைகள் அல்லது கூட்டு விசாரணைகளில் உடனடி ஒத்துழைப்பு உள்ளிட்ட மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இந்த நெறிமுறை கொண்டுள்ளது.

தரவு பாதுகாப்புகள் உட்பட மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி முறைக்கு இந்த நெறிமுறையானது உட்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...