ஈஸ்டர் தாக்குதல்: ரணிலுக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு!

Date:

கட்டுவாப்பிட்டிய நீர்கொழும்பு புனித செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்குகளின் தீர்மானம் அவர் ஜனாதிபதி பதவியை வகிக்கும் காலத்திற்கு மட்டுமே செயல்படும் என்று நீதிமன்றம் கூறியது.

நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது பிரதிவாதியான ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 35 (1) வது சரத்தின் பிரகாரம் விடுதலைப் பெறுவதற்கு உரிமையுள்ளவர் என நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நுவன் தாரக ஹீனடிகல குறிப்பிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த ஆட்சேபனைகளை நிராகரித்த நீதிமன்றம், அவருக்கும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதம அதிகாரி நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கும் எதிரான வழக்குகளை தொடரவும் தீர்மானித்துள்ளது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணிலிடம் நட்டஈடு கோரி நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...