ஐஸ் போதைப்பொருள் பாவனையைத் தடுக்க கம்பஹா மாவட்டத்தில் விசேட கண்காணிப்பு குழுக்கள்!

Date:

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கண்காணிப்புக் குழுக்களை நடைமுறைப்படுத்துவது ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புக் குழுக்கள் ஸ்தாபிக்கப்படாத பாடசாலைகளில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் குழுக்களை அமைக்குமாறு கம்பஹா கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், கம்பஹா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அங்கு அமைச்சர் கம்பஹா பிரதேச கல்விப் பணிப்பாளர் மற்றும் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் கம்பஹா பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு மேற்பார்வைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதா என  வினவப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கம்பஹா கோட்டக் கல்விப் பணிப்பாளர், கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பாடசாலைகள் தொடர்பில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது ஒரு மோசடியாகவே செயற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த மோசடியை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...