‘ஜனவரியில் அதிகரிக்கும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டாம் ‘

Date:

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 30 வீதத்தினால் அதிகரிக்கப்படும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர்  ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விலையேற்றங்கள் அனைத்தும் மிகவும் அநியாயமானதும் எனவும், எனவே மக்களுடன் இணைந்து இதனை எதிர்த்துப் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து தற்போது கிடைக்கும் லாபம் மின்சார சபையின் பழைய நஷ்டத்தை ஈடுகட்டவே என்றும், மின்கட்டணத்தை உயர்த்த அரசு பொய்யான தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறுகிறார்.

முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையின் காரணமாக இந்த நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...