துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகளை கண்டறிய குழு!

Date:

இலங்கை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மூவர் உள்ளனர். அதன்படி, எம்.டி.எஸ்.ஏ.பெரேரா, காமினி குமாரசிறி மற்றும் கேஜிபி வசந்த கமகே ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய தரப்பினரும் இந்தக் குழுவிற்கு அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழுவிற்கு கிடைத்த அனைத்து முறைப்பாடுகளையும் விசாரித்து, குழுவின் அறிக்கை 6 மாதங்களுக்குள்  பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திரா தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...