நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் குறைந்தது!

Date:

கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி,  கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு (AQI) 150க்கு மேல்  காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் அதே வேளையில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் போன்ற உணர்திறன் கொண்ட குழுக்கள் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் வார இறுதியில் குறைந்த காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றுடன் இந்தியாவில் இருந்து வெளியேறும் மாசுபட்ட காற்றின் விளைவாக இலங்கையின் காற்றின் தரம் குறைந்துள்ளது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக குறிப்பாக மழையுடன் கூடிய வானிலையுடன் காற்றின் தரம் ஏற்ற இறக்கமாக உள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...