‘நியூஸ் நவ்’இன் ஊடக பணிக்கு சர்வமதத் தலைவர்கள் ஆசீர்வாதம்!

Date:

பஹன மீடியா ஊடக அமைப்பின் ‘நியூஸ் நவ்’ தமிழின் சகோதர மொழி ஊடகமான ‘நியூஸ் நவ் சிங்களம்’ 4 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டும், 2022ஆம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட செய்யப்பட்ட விசேட நிகழ்வு, அண்மையில் கொழும்பில் உள்ள ‘நியூஸ்நவ்’ காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலாநிதி, கலகம தம்ம ரஸ்ஸி நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே, அல்ஹாஜ் அஷ்ஷெய்க், கலாநிதி ஹசன் மௌலானா அல்காதிரி, ஆகிய சர்வ சமயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கலாநிதி கலகம தம்ம ரஸ்ஸி நாயக்க தேரர் ஆசிர்வாதம் வழங்கியதுடன், தூய இலங்கைக்கான பஹன ஊடக நிறுவனத்தின் பயணம் மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள் , மக்களுக்கு தகவல்களை வழங்கி நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் நிவ்ஸ்நவ் வழங்கும் பங்களிப்பை பாராட்டினார்.

நாட்டு மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பஹன ஊடக நிறுவனத்தின் ஊடகப் பணியானது கடவுளின் ஆசீர்வாதத்தை தாமதமின்றிப் பெறும் என அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே தெரிவித்தார்.

அல்ஹாஜ் அஷ்ஷெய்க் கலாநிதி ஹஸன் மௌலானா அல் காதிரி அவர்கள், இன வேறுபாடுகளை உருவாக்கும் சில ஊடகங்களுக்கு மத்தியில் சரியான விடயங்களை சரியான முறையில் வழங்கும் ‘நியூஸ் நவ்’ இணையதளத்தின் சேவையை பாராட்டினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பஹன ஊடக நிறுவகத்தின் தலைவர் செய்யித் சாலிம் மௌலானா, சர்வமத தலைவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வைத்தார்.

விசேடமாக, நாட்டின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்திற்கான நியூஸ் நவ் மீடியாவின் சமூகப் பணியை பாராட்டி, பஹன ஊடக நிறுவனத்தின் தலைவர் செய்யித் சாலிம் மௌலானா, பஹன ஊடக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், அப்துல் முஜீப் சாலிஹ் ஆகிய இருவரும் சர்வ மதத் தலைவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...