பாடசாலை ஆசிரியர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல்?

Date:

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தன்னை தாக்கியதாக கூறி பண்டாரவளை புனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தியத்தலாவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் பாடசாலைக்குள் வந்து தாக்குதலை நடத்தியதாக ஆசிரியர் கூறுகிறார்.

கடந்த சில நாட்களாக மோசமான வானிலை காரணமாக பாடசாலைக் கட்டடங்களை சீரமைக்க ஆசிரியர்கள் மற்றும் பலர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலைக்கு வந்துள்ளனர்.

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தலைவருக்கும், குறித்த ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான், ஆசிரியரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செந்தில் தொண்டமான் மறைந்த  ஆறுமுகன் தொண்டமானின் மூத்த சகோதரியின் மகன் ஆவார். முன்னதாக 2015ஆம் ஆண்டு தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதற்காக அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், 2014 ஆம் ஆண்டு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் வாகனத்தை குறுக்கே சென்று இடையூறு செய்ததாக கூறப்படும் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...