பின்தங்கிய கிராமமான ஒட்டுக்குளம் பகுதியிலிருந்து ஒரு மகப்பேற்று மருத்துவர்!

Date:

குருநாகல் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணராக ஒட்டுக்குளத்தைச் சேர்ந்த மௌஜுத் எம். பஸீல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 29 மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணர்களில் 4ஆம் இடத்தில் இவர் தெரிவு செய்யப்பட்டமை பாராட்டத்தக்கதாகும்.

இவரை கௌரவிக்கும் முகமாக ஏ.ஆர்.எம். குடும்பத்தினரால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு நாஸ் கலாசார நிலையத்தில் மௌலவி உவைஸ் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த மௌஜுத் எம். பஸீல் முதலாவது மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விசேட வைத்திய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ‘நியூஸ் நவ்’ சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...