பெரியகுளம் மற்றும் இக்பால் நகரில் 4000 மரச்செடிகள் விநியோகம்: பசுமைப் புரட்சியை நோக்கிய முஸ்லிம் எய்டின் முயற்சி!

Date:

உணவு உற்பத்தி மற்றும் பசுமைப் புரட்சிக்கான அரசின் கொள்கைப் பிரகடனத்தின் ஒரு பகுதியாக, பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 4000 மரச்செடிகள் நவம்பர் 23ஆம் திகதி இலவசமாக வழங்கப்பட்டன.

மிகவும் வளமான குச்சவெளி பகுதி விவசாயத்திற்கு பெயர் பெற்றது. இப்பிரதேச மக்களை உணவு உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காகவும், நாட்டில் நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக விவசாயப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காகவும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை நிலையானதாகவும் இலாபகரமானதாகவும் மாற்றும் வகையில் பரந்த அனுபவத்துடன் உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த பயிர்ச்செய்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதேச செயலாளர் திரு.கே.குணநாதன் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவிடம் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...