பெரியகுளம் மற்றும் இக்பால் நகரில் 4000 மரச்செடிகள் விநியோகம்: பசுமைப் புரட்சியை நோக்கிய முஸ்லிம் எய்டின் முயற்சி!

Date:

உணவு உற்பத்தி மற்றும் பசுமைப் புரட்சிக்கான அரசின் கொள்கைப் பிரகடனத்தின் ஒரு பகுதியாக, பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 4000 மரச்செடிகள் நவம்பர் 23ஆம் திகதி இலவசமாக வழங்கப்பட்டன.

மிகவும் வளமான குச்சவெளி பகுதி விவசாயத்திற்கு பெயர் பெற்றது. இப்பிரதேச மக்களை உணவு உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காகவும், நாட்டில் நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக விவசாயப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காகவும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை நிலையானதாகவும் இலாபகரமானதாகவும் மாற்றும் வகையில் பரந்த அனுபவத்துடன் உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த பயிர்ச்செய்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதேச செயலாளர் திரு.கே.குணநாதன் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவிடம் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...