போதைப்பொருள் பாவனையாளர்களுடைய எந்தவொரு குடும்ப விடயங்களிலும் சம்பந்தப்பட மாட்டோம்: காத்தான்குடி அல்அக்ஸா பள்ளிவாசல் பகிரங்க அறிவிப்பு

Date:

போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது என காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கடந்த 03ஆம் திகதி புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பின்வரும் விடயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.

கடந்த சில மாதங்களாக எமது பகுதியில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதுடன் அதன் விளைவுகளும் மிக மோசமாகக் காணப்படுவதனால் பின்வரும் விடயங்கள் எதிர்வரும் 2023 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளன.

அதற்கமைய, போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் தொழாதவர்களின் ஜனாஸாக்கள் எமது மையவாடியில் அவர்களுக்காக பிரேத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்யப்படும்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பெயர் விபரங்கள் விளம்பரப் பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமம் இரத்துச் செய்யப்படும்.

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு நடக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...