போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடாத்திவந்த ஒருவர் கைது!

Date:

நாடளாவிய  ரீதியில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை நடாத்தி மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் பம்பலப்பிட்டி டிக்மன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பலருடன் இணைந்து போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் வலையமைப்பை நடத்தி வருவதாகவும், இவர்கள் அனைவருக்கும் எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரை கைது செய்ய கண்டி நீதிமன்றத்தினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் சந்தேகநபர் டிக்மன் வீதியில் மற்றுமொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...