‘மின் கட்டணம் உயர்ந்தால் முறைப்பாடு இன்றி மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும்’

Date:

இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் முறைப்பாடு இன்றி மக்கள் சார்பில் தலையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மின்சார அமைச்சும் இலங்கை மின்சார சபையும் கூறியது போன்று ஜனவரி மாதம் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கும் போது, ​​மக்களை மேலும் ஒடுக்குவதற்கு எந்த கட்சிக்கும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...