முட்டை தட்டுப்பாடு காரணமாக கேக் விலை அதிகரிப்பு

Date:

உள்ளூர் சந்தையில் முட்டை தட்டுப்பாடு காரணமாக  நத்தார் காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

சந்தையில் முட்டை ஒன்றின் விலை சுமார் 70 ஆக அதிகரித்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

முட்டை விலை கணிசமான அளவு உயர்ந்தாலும் சந்தையில் முட்டையை காண முடியவில்லை. சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்த மாஃபியா உருவாகியுள்ளது.

எனவே விலைவாசி உயர்வால், மக்கள் கேக் வாங்க கடைகளுக்கு வருவதில்லை, பேக்கரிகளில் கூட கேக்குகளுக்கு வெண்ணெய் பயன்படுத்த முடியாது.

வெண்ணெய் பயன்படுத்தினால், ஒரு கிலோ கேக் விலை, 3,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றார்.

சந்தையில் முட்டை விலையை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து நுகர்வோரை நிம்மதி அடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும்...

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வளர்பிறை’ சஞ்சிகை வெளியீட்டு விழா

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பப் பிரிவு...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

தனது ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இன்று (27)...