மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் ‘9A’ பெற்றவர்களுக்கு பாராட்டு விழா: மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Date:

மேல் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து இம்முறை (2021) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி 9 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) மற்றும் கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கமும் இணைந்து இந்த பாராட்டு விழாவை ஏற்பாட செய்துள்ளதாக கஹட்டோவிட்ட MLSC தலைவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்திலுள்ள (கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் பாடசாலைகளில் இம்முறை ‘9 ஏ’ சித்தி பெற்ற மாணவர்கள் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

பாடசாலை அதிபரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பம் மற்றும் பெறுபேற்றையும் விண்ணப்பப்படிவத்தில் மாணவரின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

இந்நிகழ்வு எதிர்வரும் 2023 மார்ச் 02 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) கட்டடத்தில் நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: செயலாளர், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில், 48/1, ஓகொடபொல வீதி, கஹட்டோவிட்ட

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...