இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

Date:

தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இரவு நேர மின்வெட்டினை அமுல்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டிசெம்பர் 15ஆம் திகதி வரை மதியம் ஒரு மணி நேரமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டிசம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் இரவு நேர மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைக்கப்படும்.

மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் மின்வெட்டு இருக்காது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...