உலகளாவிய அறிவு சுட்டெண்ணில் இலங்கைக்கு 79ஆவது இடம்!

Date:

உலகளாவிய அறிவு சுட்டெண் 2022 இல் 132 நாடுகளில் இலங்கை 79 வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகளாவிய அறிவுக் குறியீடு என்பது கல்வி, புத்தாக்கம், அறிவு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளின் அடிப்படையில் கணிக்கப்படும்.

அதற்கமைய முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவு அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து   இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.

இந்தச் சுட்டெண்ணில் 79ஆவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கைக்கு 43.4 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 68.37 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து 68.28 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஸ்வீடன் 66.96 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த குறியீட்டில் இந்தியா 91வது இடத்தில் உள்ளது மற்றும் இந்தியா 41.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...