தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவுப்பகுதியை கடந்து செல்வதாகவும், இதன் காரணமாக பல பகுதிகளில் கனமழை மற்றும் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் எனவும் ஏனைய மாகாணங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் பேச்சாளர் தெரிவித்தார்.
75 மிமீக்கு மேல் ஏற்படும். நாடளாவிய ரீதியில் மணிக்கு 40.50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் மறு அறிவித்தல் வரை அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.