சர்வதேசத்துடன், இலங்கை 123 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டது!

Date:

இந்த ஆண்டில் மாத்திரம் சர்வதேச முதலீட்டாளர்களுடன் 123 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் 41 உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் எனவும், எஞ்சிய 82 உடன்படிக்கைகளும் மறுமுதலீட்டுகளுக்கான உடன்படிக்கைகள் எனவும் அவர் கூறுகின்றார்.

கொழும்பில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியா, ஜப்பான், நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் இவர்களில் அடங்குவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...