சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகள் அமுல்படுத்தப்படும்!

Date:

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான சுகாதார விதிமுறைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது.

சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என்றாலும், அவை தேவையில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளை அவர்களால் எடுக்க முடியவில்லை.

எனவே சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கான உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கொவிட் பரிசோதனைகள் தேவைப்பட்டாலும், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதியை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கை பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆனால் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், கொவிட் தொற்றுநோயைத் தடுக்க அவர்கள் முன்பு இருந்த அதே சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கொவிட் வைரஸ் பரவலாக பரவி வருவதாகவும், சரியான தகவல்கள் எதுவும் நாட்டினால் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...