தினேஷ் ஷாஃப்டரின் இறுதி சடங்குகள் இன்று!

Date:

கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிச் சடங்குகள் இன்று (டிச. 18) நடைபெற உள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் தலைவரான தினேஷ் கடந்த 15 ஆம் திகதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தற்போது அவர் பொரளை பொது மயானத்திற்கு வந்த வழியிலேயே குற்றப் புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீதிகளின் சிசிடிவி காட்சிகளை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல பகுதிகளில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸும் அந்த நபர்களில் ஒருவர்.

பொரளை பொது மயானத்தில் கைகால்கள் கட்டப்பட்டு பலத்த காயங்களுடன் காரில் சென்ற அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...