துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகளை கண்டறிய குழு!

Date:

இலங்கை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மூவர் உள்ளனர். அதன்படி, எம்.டி.எஸ்.ஏ.பெரேரா, காமினி குமாரசிறி மற்றும் கேஜிபி வசந்த கமகே ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய தரப்பினரும் இந்தக் குழுவிற்கு அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழுவிற்கு கிடைத்த அனைத்து முறைப்பாடுகளையும் விசாரித்து, குழுவின் அறிக்கை 6 மாதங்களுக்குள்  பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திரா தெரிவித்தார்.

Popular

More like this
Related

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை...