பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து சுகாதாரத் துறையின் அவசர அறிவிப்பு!

Date:

நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்தும் விளக்கப்பட்டது.காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்றன இந்த வைரஸிற்கான அறிகுறியாகும், அத்தோடு குழந்தைகள் பால் குடிக்காமை, பசியின்மை , காய்ச்சல் இருமல் சளி, ஏற்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

மேலும் டெங்கு, கொவிட், மற்றும் சாதரண காய்ச்சலா என்று வைத்திய பரிசோதனைகளில் மூலமே கண்டறிய முடியும்.

ஆகவே முடிந்தளவிற்கு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதோடு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறுவைத்திய நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைரஸ் காய்ச்சலால் தினமும் சுமார் 40 குழந்தைகள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...