பாடசாலைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 75 பேர் கைது!

Date:

மேல் மாகாணத்தில் உள்ள 122 பாடசாலைகள் தொடர்பில் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையில் 75 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 1 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ், 2 கிலோ 148 கிராம் கஞ்சா மற்றும் 10 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...