பாடசாலை ஆசிரியர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல்?

Date:

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தன்னை தாக்கியதாக கூறி பண்டாரவளை புனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தியத்தலாவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் பாடசாலைக்குள் வந்து தாக்குதலை நடத்தியதாக ஆசிரியர் கூறுகிறார்.

கடந்த சில நாட்களாக மோசமான வானிலை காரணமாக பாடசாலைக் கட்டடங்களை சீரமைக்க ஆசிரியர்கள் மற்றும் பலர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலைக்கு வந்துள்ளனர்.

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தலைவருக்கும், குறித்த ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான், ஆசிரியரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செந்தில் தொண்டமான் மறைந்த  ஆறுமுகன் தொண்டமானின் மூத்த சகோதரியின் மகன் ஆவார். முன்னதாக 2015ஆம் ஆண்டு தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதற்காக அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், 2014 ஆம் ஆண்டு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் வாகனத்தை குறுக்கே சென்று இடையூறு செய்ததாக கூறப்படும் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...