பாடசாலை ஆசிரியர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல்?

Date:

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தன்னை தாக்கியதாக கூறி பண்டாரவளை புனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தியத்தலாவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் பாடசாலைக்குள் வந்து தாக்குதலை நடத்தியதாக ஆசிரியர் கூறுகிறார்.

கடந்த சில நாட்களாக மோசமான வானிலை காரணமாக பாடசாலைக் கட்டடங்களை சீரமைக்க ஆசிரியர்கள் மற்றும் பலர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலைக்கு வந்துள்ளனர்.

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தலைவருக்கும், குறித்த ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான், ஆசிரியரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செந்தில் தொண்டமான் மறைந்த  ஆறுமுகன் தொண்டமானின் மூத்த சகோதரியின் மகன் ஆவார். முன்னதாக 2015ஆம் ஆண்டு தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதற்காக அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், 2014 ஆம் ஆண்டு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் வாகனத்தை குறுக்கே சென்று இடையூறு செய்ததாக கூறப்படும் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...