பெரியகுளம் மற்றும் இக்பால் நகரில் 4000 மரச்செடிகள் விநியோகம்: பசுமைப் புரட்சியை நோக்கிய முஸ்லிம் எய்டின் முயற்சி!

Date:

உணவு உற்பத்தி மற்றும் பசுமைப் புரட்சிக்கான அரசின் கொள்கைப் பிரகடனத்தின் ஒரு பகுதியாக, பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 4000 மரச்செடிகள் நவம்பர் 23ஆம் திகதி இலவசமாக வழங்கப்பட்டன.

மிகவும் வளமான குச்சவெளி பகுதி விவசாயத்திற்கு பெயர் பெற்றது. இப்பிரதேச மக்களை உணவு உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காகவும், நாட்டில் நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக விவசாயப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காகவும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை நிலையானதாகவும் இலாபகரமானதாகவும் மாற்றும் வகையில் பரந்த அனுபவத்துடன் உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த பயிர்ச்செய்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதேச செயலாளர் திரு.கே.குணநாதன் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவிடம் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...