பெரியகுளம் மற்றும் இக்பால் நகரில் 4000 மரச்செடிகள் விநியோகம்: பசுமைப் புரட்சியை நோக்கிய முஸ்லிம் எய்டின் முயற்சி!

Date:

உணவு உற்பத்தி மற்றும் பசுமைப் புரட்சிக்கான அரசின் கொள்கைப் பிரகடனத்தின் ஒரு பகுதியாக, பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 4000 மரச்செடிகள் நவம்பர் 23ஆம் திகதி இலவசமாக வழங்கப்பட்டன.

மிகவும் வளமான குச்சவெளி பகுதி விவசாயத்திற்கு பெயர் பெற்றது. இப்பிரதேச மக்களை உணவு உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காகவும், நாட்டில் நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக விவசாயப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காகவும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை நிலையானதாகவும் இலாபகரமானதாகவும் மாற்றும் வகையில் பரந்த அனுபவத்துடன் உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த பயிர்ச்செய்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதேச செயலாளர் திரு.கே.குணநாதன் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவிடம் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...

நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழா கொழும்பில் ஆரம்பம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள...