வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி, அக்குரணை, துனுவில பிரதேசத்தில்  வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 16 வயது சிறுவனும் 18 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பிரதான வீதி முக்கால்வாய் பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.

ஆபத்தான சூழ்நிலையை கருத்திற் கொண்டு பொலிஸார் பல வாகனங்களை வழிமறித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லையில் இருந்து கம்பளை, நாவலப்பிட்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு குறுகிய பாதையாக ஹெம்மாதகம, கம்பளை வீதி பயன்படுத்தப்படுகிறது.

கண்டி பிரதேசத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையினால் கண்டி புகையிரத நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்துடன் கண்டி மற்றும் மஹையாவ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

கெலிஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையும் நீரில் மூழ்கியுள்ளது.

இந்த மோசமான காலநிலை காரணமாக பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை காலை 10:15க்கு இயக்கப்படவிருந்த புகையிரதமும், மதியம் 12:40 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து நானுஓயா வரையான புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...