வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி, அக்குரணை, துனுவில பிரதேசத்தில்  வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 16 வயது சிறுவனும் 18 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பிரதான வீதி முக்கால்வாய் பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.

ஆபத்தான சூழ்நிலையை கருத்திற் கொண்டு பொலிஸார் பல வாகனங்களை வழிமறித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லையில் இருந்து கம்பளை, நாவலப்பிட்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு குறுகிய பாதையாக ஹெம்மாதகம, கம்பளை வீதி பயன்படுத்தப்படுகிறது.

கண்டி பிரதேசத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையினால் கண்டி புகையிரத நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்துடன் கண்டி மற்றும் மஹையாவ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

கெலிஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையும் நீரில் மூழ்கியுள்ளது.

இந்த மோசமான காலநிலை காரணமாக பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை காலை 10:15க்கு இயக்கப்படவிருந்த புகையிரதமும், மதியம் 12:40 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து நானுஓயா வரையான புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...