10 மணி நேரம் மின்வெட்டு இருக்காது: எரிசக்தி அமைச்சர்

Date:

நிலக்கரி இல்லாமல் அடுத்த வருடம் 10 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (டிச.21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மின் பொறியியலாளர் சங்கத்திற்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி போதுமானதாக இல்லை என்றால் அதற்கான மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையில் உள்ள நிலக்கரி ஆலை டிசம்பர் 31ஆம் திகதி முற்றாக மூடப்படவுள்ளது.

இதனால் அடுத்த வருடம் சுமார் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக கட்டண திருத்தம் செய்யப்படும்.

கட்டண திருத்தத்திற்கு தேவையான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட அதிகாரத்திற்கான உறுதியை அட்டர்னி ஜெனரல் வழங்கியுள்ளார்.”என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...