FIFA-2022: வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக மொராக்கோ மன்னருக்கு சவூதி இளவரசர் தொலைபேசியில் வாழ்த்து!

Date:

சவூதி இளவரசரும் பிரதமருமான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், மொராக்கோவின் வரலாற்று உலகக் கோப்பை வெற்றிக்காக மொராக்கோ மன்னர் ஆறாம் முகமதுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது, கத்தாரில் நடந்த பிஃபா உலகக் கோப்பையில் அதன் தேசிய அணியின் வரலாற்று சாதனைக்காக மொராக்கோ மன்னர் மற்றும் மக்களுக்கு பட்டத்து இளவரசர் வாழ்த்து தெரிவித்தார்.

பிஃபா உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற சாதனையை மொராக்கோ படைத்துள்ளது.

இந்நிலையில், மொராக்கோ சாதித்தது அனைவரையும் மகிழ்வித்த ஒரு அரபு விளையாட்டு சாதனையாகும், புதன்கிழமை நடைபெறும் அரையிறுதியில் மொராக்கோ தேசிய அணிக்கு வெற்றிபெற வாழ்த்துக்களையும் பட்டத்து இளவரசர் தெரிவித்தார்.

இதனையடுத்து மொராக்கோ மன்னர் முகமது, தனது நாட்டின் தேசிய அணிக்கு வாழ்த்துக்களுக்காகவும், மொராக்கோ மற்றும் அதன் மக்கள் மீதான பட்டத்து இளவரசரின் உன்னத உணர்வுகளுக்காகவும்  நன்றி தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடு என்ற பெருமையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...