வேலைத்திட்டம் ஒன்றிற்காக கொண்டு வரப்பட்ட 11 ‘GI’ குழாய்களை மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க மற்றும் அவரது மூத்த சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தங்காலை நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர் தேக்கத்தின் குழாய்களை துண்டுகளாக்கி வாரியபொல லொறியில் ஏற்றிச் செல்வதாக நீர் திட்டத்தின் தலைவர் எனக் கூறப்படும் பிரதேச சபைத்தலைவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டார்.