அடுத்த ஆண்டு முதல் மீனவர்களுக்கு மின்சார இயந்திர படகுகள்

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த ஆண்டு முதல் மின்சார இயந்திர படகுகளை மீனவர்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

சிறியளவிலான மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 86 ரூபா மட்டுமே செலவாகும் மின்கலங்களில் 100 கிலோமீற்றர் பயணிக்கக் கூடிய மின்சார மோட்டார் படகுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மண்ணெண்ணெய் மற்றும் டீசலில் இயங்கும் படகுகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகளை பொருத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக குறிப்பிட்ட நடமாடும் சேவையை அமைச்சு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...