இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கவே நாட்டைக் கையகப்படுத்தினேன்: ஜனாதிபதி

Date:

நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவே நாட்டைக் கையகப்படுத்த முன்வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட 306 C-2 லியோ கழகத்திற்கு 6,500 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும்  லியோ தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இன்றைய தினத்தைப் பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்காமல் 25 வருடங்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...