காற்று மாசுபாடு: தோல், கண் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை!

Date:

நிலவும் குளிர் காலநிலை மற்றும் காற்று மாசுபாடு காரணமாக சில நோய்கள் உருவாகலாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாற்றத்தின் சமீபத்திய நிலை மற்றும் உங்கள் ஆரோக்கியம் என்ற தொனிப்பொருளில் சுகாதாரப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் தோல் நோய்கள் உருவாகலாம் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதக்காலத்தில் அதிகாமாக குளிர் கால நிலை ஏற்படுவது வழக்கம், எனினும் காற்று மாசுபாட்டை எடுத்துகொண்டால் வெயில் காலத்தில் காற்று மாசும் சேர்ந்து ஏற்படுவதால் பாதிப்பு அதிகமாகியுள்ளது.   காலை மாலை இரு தடவைகள் தோலை சுத்தப்படுத்திக்கொள்வது அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதுள்ள காற்று மாசுபாட்டுடன் கண் நோய்களும் அதிகரிக்கலாம் என தேசிய கண் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் கபில பந்துசேன தெரிவித்தார்.

கடந்த நாட்களை விட தற்போது கண் அரிப்பு, கண் சிவத்தல்  போன்ற அறிகுறிகளுடன் நோயாளர்கள் அதிகமாக வைத்தியாசாலைக்கு வருகைத்தருகின்றார்கள்.

அதேநேரத்தில் இந்த காற்று மாசுபாடு காரணமாக அதிகமான நோயாளர்கள் கண் மடல் காய்தல் போன்ற அறிகுறியே அதிகமாக காணப்படுகின்றன.

எனவே தற்காலிகமான நோய் குறிகள் என்றாலும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என கண் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...