கொழும்பு ‘லைட் ரயில்’ போக்குவரத்து திட்டம் மீண்டும் தொடங்கப்படும்!

Date:

கடந்த அரசாங்கத்தில் நிறுத்தப்பட்ட ‘லைட் ரயில்’ எனப்படும் இலகுரக ரயில் போக்குவரத்து (LRT)  திட்டத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து, ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டத்தை மீண்டும் புத்துயிர் பெற தீர்மானித்தது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச கண்காணிப்பு நிதியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இலகு ரயில் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி அறிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டைக்கும் மாலபேக்கும் இடையில் 15.8 கிலோமீற்றர் நீளமான புகையிரதப் பகுதி முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்படுகிறது.

முழுமையாக இயங்கும் வலையமைப்பு தரையிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும்.

போக்குவரத்து மையம், தகவல் தொழில்நுட்ப பூங்கா, மாலபே, தலஹேன,   தேசிய வைத்தியசாலை, பொரளை, கோட்டா வீதி ராஜகிரிய, வெலிக்கடை, செத்சிறிபாய, பத்தரமுல்ல, பலந்துன, மற்றும் தலஹேன உள்ளிட்ட 16 நிலையங்கள் இதில் அடங்கும்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...