சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணியில் இணைகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Date:

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன் இதில் இருந்து விலகினார். புதிய அணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது சவுதி அரேபியாவின் அல்–நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் ரொனால்டோ விளையாட ஒப்பந்தம் ஆனார்.

தற்போது துபாயில் உள்ள இவர், வரும் ஜன. 1 முதல் இந்த அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 1793 கோடி தர முன்வந்துள்ளது அணி நிர்வாகம். இதையடுத்து ரொனால்டோவின் மாத சம்பளம் ரூ. 149 கோடியாக இருக்கும். வார சம்பளம் ரூ. 34.5 கோடி வரை கிடைக்கும்.

வரும் 2030ல் உலக கோப்பை கால்பந்து தொடரை சொந்த மண்ணில் நடந்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.

Popular

More like this
Related

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...

2025 ஆம் ஆண்டில் மோதல்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளுக்கு மத்தியில் பிறந்த 80 இலட்சம் குழந்தைகள்.

2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் குழந்தைகள் ஆயுத...

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கிய துருக்கி.

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு துருக்கி அரசு உலர் உணவுப் பொருட்கள்...

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஜனவரியில்..!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை...