போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடாத்திவந்த ஒருவர் கைது!

Date:

நாடளாவிய  ரீதியில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை நடாத்தி மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் பம்பலப்பிட்டி டிக்மன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பலருடன் இணைந்து போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் வலையமைப்பை நடத்தி வருவதாகவும், இவர்கள் அனைவருக்கும் எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரை கைது செய்ய கண்டி நீதிமன்றத்தினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் சந்தேகநபர் டிக்மன் வீதியில் மற்றுமொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சேருநுவர பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 14 பேர் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில்...

டிசம்பர் 26 தேசிய பாதுகாப்பு தினம்: உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் 2 நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 31,000...

இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும்...

தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி.. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள்...