மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு “ஸஹிரா நடைபவணி” கடந்த ஞாயிற்றுக்கிழமை விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது .
பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இந்த நடைபவணி பலகாத்திரமான படைப்புக்களுடன் மாவனல்லை நகரை வலம் வந்து ஸஹிராத் தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது.
நாலா பக்கங்களிலும் வந்து கல்விகற்ற கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் 244 மீற்றர் அதிநீளமான பாடசாலைக்கொடியை சுமந்த கல்லூரியின் 83rd batch (2016 A/L) மாணவர்களினால் தயாரிக்கப்பட்டது.
150 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்தமை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.