மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் ‘9A’ பெற்றவர்களுக்கு பாராட்டு விழா: மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Date:

மேல் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து இம்முறை (2021) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி 9 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) மற்றும் கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கமும் இணைந்து இந்த பாராட்டு விழாவை ஏற்பாட செய்துள்ளதாக கஹட்டோவிட்ட MLSC தலைவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்திலுள்ள (கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் பாடசாலைகளில் இம்முறை ‘9 ஏ’ சித்தி பெற்ற மாணவர்கள் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

பாடசாலை அதிபரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பம் மற்றும் பெறுபேற்றையும் விண்ணப்பப்படிவத்தில் மாணவரின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

இந்நிகழ்வு எதிர்வரும் 2023 மார்ச் 02 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) கட்டடத்தில் நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: செயலாளர், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில், 48/1, ஓகொடபொல வீதி, கஹட்டோவிட்ட

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...