அக்குறணைக்கான பெருமை அல்ல, இலங்கைக்கான பெருமை: கத்தார் கிராத் போட்டியில் அஷ்ஷெய்க் காரி ஜாமில் ஹாபிழ் முதல் 100 இடங்களுக்குள்!

Date:

கத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக அல் குர்ஆன் “கிராத்” போட்டியில் அக்குறணையைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் காரி ஜாமில் ஹாபிழ் முதல் 100 இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆன்லைனில் நடந்த இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 1273 காரிகள் கலந்து கொண்டனர், மேலும் முதல் 100 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் காரி ஜாமில் ஹாபிழ் மட்டும் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கத்தாரால் நடத்தப்படும் மிகப்பெரிய உலக அல் குர்ஆன் போட்டி இதுவாகும். தேர்ந்தெடுப்பவர்கள் பெரிய சர்வதேச காரிகள் ஆவார்கள். காரி ஜாமில் ஹாபிழின் வெற்றி இலங்கைத் நாட்டிற்கும் அக்குறணைக்கும் மிகவும் பெருமையான தருணமாகும்.

கத்தார் தோஹாவில் விரைவில் நடைபெறவிருக்கும் காரி ஜாமில் ஹாபிழின் அடுத்த சுற்றுக்காக நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Popular

More like this
Related

காசாவில் அல் ஜசீரா செய்தியாளர் முகமது விஷாஹ் கொ*லப்பட்டார்: பத்திரிகையாளர்கள் பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு.

அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது...

லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம்: ஈரான் எச்சரிக்கை.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட  பிறகு,நேற்று...

சில பகுதிகளில் பிற்பகலில் மழை: நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா...

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...