இலங்கை கண் தான சங்கத்தினால் 500 இலவச வெண்புரை சத்திர சிகிச்சை!

Date:

இலவச விழி வெண்புரை (கட்ரக்) சத்திரசிகிச்சையை மேற்கொள்ள இலங்கையின் கண் தான சங்கம் முன்வந்துள்ளது.

அதற்கமைய 500 பேருக்கு குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவிருப்பதுடன் இதுவரையில் 280 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வறுமையின் கீழ் வாழ்கின்றவர்களுக்கு இலவசமாக வெண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே இந்த சத்திர சிகிச்சையை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொழும்பு கண் தான சங்கத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றார்கள்.

அதற்கமைய சத்திரசிகிச்சையை பதிவுசெய்ய வருபவர்கள் கிராமசேவகர் சான்றிதழ், நீரிழிவு தொடர்பான பரிசோதனை, ECG பரிசோதனை உள்ளிட்ட பத்திரங்களை  சமர்ப்பிக்க வேண்டும்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...