உள்ளூராட்சி தேர்தலில் யானையும் மொட்டும் இணைகிறது!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் 3 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இரு கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொட்டு அல்லது யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

பல உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தனித்து போட்டியிடுவதற்கும் உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஒன்றிணைந்து அமைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வஜிர அபேவர்தன, ரங்கே பண்டார, ருவான் விஜயவர்தன ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...