கம்பளையில் தனியார் வங்கியின் ATM இயந்திரம் கொள்ளை: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாதுகாப்பு அதிகாரி மீட்பு

Date:

கம்பளை நகரில் கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலையளவில் நான்கு சந்தேகநபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை முற்றாக அகற்றி கொண்டு சென்றுள்ளனர்.

ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவொன்று அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை நாற்காலியில் கட்டி வைத்துவிட்டு அங்கிருந்த பணம் வைப்பு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு நவீன வேன் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரி கயிறுகளை அவிழ்த்து வங்கியின் ‘எமர்ஜென்சி ஹார்னை’ அடித்து வேனின் எண்ணை எழுதி வைத்தார்.

பின்னர் தரையில் பொருத்தப்பட்டிருந்த பண வைப்பு இயந்திரத்தை வெளியே இழுத்து மேலே தூக்கி வேனில் ஏற்றி விட்டு தப்பி ஓடிவிட்டதாக பாதுகாவலர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதேவேளை சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் வேனை இன்று காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...