கொவிட் கடன் நிவாரணத்தை எதிர்பார்க்க வேண்டாம்! – மத்திய வங்கியின் ஆளுநர்

Date:

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக சீர்குலைந்த சுற்றுலா உள்ளிட்ட வணிகத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் செலுத்தும் நிவாரணத் திட்டத்தை மேலும் நீட்டிப்பது குறித்து எதிர்பார்க்க வேண்டாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் நிதிநிலையை நிலையானதாக மாற்றுவதில் இப்போதும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவது மிகவும் முக்கியமானது மற்றும் இந்தக் காரணிகளின் அடிப்படையில், நாட்டின் வங்கித் துறை தொடர்ந்து நிதி நிலையானதாக இருக்கும்.

2023ஆம் ஆண்டு பொருளாதாரம் தொடர்பில் இலங்கை வர்த்தக சபையினால் தயாரிக்கப்பட்ட பிரசுரத்தை வெளியிடும் போது ஸ்திரமின்மையை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல தொழிலதிபர்களும், வணிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்க முடியாது. மாறாக, வணிகங்களின் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது தொடர்பான பிற விருப்பங்களுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உதாரணமாக, தற்போது அதிக கடன் சலுகை உள்ள சுற்றுலாத் துறையை கருத்தில் கொள்ளலாம்.

அவர்கள் தங்கள் தொழில்துறையை மீட்டெடுக்கும் வகையில், அவர்கள் நிறைய சுற்றுலா ஊக்குவிப்புகளைச்செய்ய வேண்டும். இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அதுதான் ஒரே வழி.”

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...