சீனா – இந்தியாவும் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும்!

Date:

சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர் கடனை குறைக்க சீனாவும் இந்தியாவும் ஒப்புக் கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது.

எனவே அனைத்துத் தரப்பினரும் விரைவாகச் செயல்படுவது சிறந்தது என்று மத்திய வங்கியின் ஆளுநர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் நல்லது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாடுகளின் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் கடமைகளை நிறைவேற்றாமல், நீண்ட காலத்திற்கு இவ்வாறான நிலையில் இருக்க இலங்கையும் விரும்பவில்லை. அது நாட்டுக்கும் மக்களுக்கு நல்லதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு நல்லதல்ல என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...