ஜனவரியில் 20 கொலை சம்பவங்கள்..!

Date:

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 18 ஆம் திகதி வரையான காலத்தில் தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த 20 பேரில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக இந்த கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

அதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலத்தில் நாடு முழுவதும் 516 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இவற்றில் 458 சம்பவங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காலப்பகுதியில் நடந்த மோதல் சம்பவங்களில் 731 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவற்றில் 638 சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

மேற்படி சம்பவங்கள் தொடர்பாக சம்பவங்கள் நடந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...